பிரதான தொடுப்புக்கள்
- ۞முகப்பு
- ۞ஆலயம் பற்றி
- ۞பரிபாலன சபை
- ۞திறக்கும் நேரம்
- ۞அறிவித்தல்கள்
- ۞படத்தொகுப்புகள்
- ۞வரும் வழிகள்
- ۞வங்கி விபரம்
- ۞விசேட தினங்கள் 2024
- ۞Pradosham/பிரதோஷம் 2024
- ۞திருவிழா 2022,23,24,25
- ۞Spenden/நன்கொடை
- ۞தமிழர் நிகழ்வுகள் 2024
ஒம் நமசிவாய

முகவரி Adresse
Kieferstr. 24
D-44225 Dortmund-Hombruch
Germany.
தொலைபேசி Telefon
+49 231 72 51 51 65
செவி அஞ்சல் whatsapp
+49 15 20 25 25 24 3
மின்னஞ்சல் Email
info@sivantempel-dortmund.de
தொலைநகல் Fax
+49 231 72 51 51 66
முகனூல் facebook
hindutempelgermany
Sivantempel.de
sivan_tempeldortmund
ஒம் நமசிவாய

சிறப்பு நிகழ்ச்சிகள்...





தமிழ் மாதக் நாட்காட்டி 2023 ஐரோப்பா
மெய்யடியார்களே!
ஐரோப்பாக் கண்டத்தில் ஜேர்மன் திருநாட்டில் சகலவளங்களும் சூழப்பெற்ற நோட்றைன் வெஸ்ற்பாலின் மாநிலத்தில் அறிஞர்கள் சான்றோர்கள சமய சமூகப் பற்றாளர்கள கலைஞர்களையும் தன்னகத்தே கொண்ட டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.ஆலயம் தொழுவது சாலவும் நன்று...

தாய் தந்தையர் முன்னெறித் தெய்வம் எனக் குறிப்பட்ட ஒளவையார், அதற்கடுத்து ஆலயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சைவமக்கள் ஒன்றுகூடி இறைவனை வழிபடும் இடம் ஆலயமாகும். ஆ, என்பது ஆன்மாவையும் லயம், என்பது சேர்வதற்குரிய இடம் என்பதையும் குறிக்கும். ஆலயங்கள் ஆகம விதிகளுக்கு அமைய, மனித உடலமைப்பு முறையில் அமைக்கப்பட்டவையாகும். தலை - கருவறை. கழுத்து - அர்த்த மண்டபம். வயிறு - மஹாமண்டபம். தொப்புள் - வாஹன்பீடம். துடைப்பகுதி - நூற்றுக்கால் மண்டபம். முன்கால் - நடைமண்டபம். பாதம் - இராசகோபுரம் கைகள் - சுற்றுமதில். சிகை(தலைமுடி) - விமானம். ஆலய வழிபாட்டு முறைகளும் சிவாகமங்களின் படியே நடைபெறுகின்றன.
ஆகமங்கள் ஒவ்வொன்றும் நான்கு பாதங்களாக அமைந்துள்ளன. அவை சரிகை, கிரிகை, யோகம், ஞானம் எனப்படும். இதில் சரிகை ஆலய வழிபாட்டைக் கூறுகிறது. மனிதன் தன்னைத் துன்பங்கள் தொடரா வண்ணம் காத்துக்கொள்ள, புனிதமான ஒரு இடத்தை நாடிச் செல்ல வேண்டும். அவ்வாறு நாடிச் செல்லுமிடம்தான் ஆலயம். ஆலயத்துக்குச் செல்லும்போது, முழுகி, தூய்மையான ஆடைகள் அணிந்து, அகமும் புறமும் சுத்தமாகச் செல்லவேணடும். முதலில் கொடிமர தரிசனம் செய்து, பாவங்களையும் துன்பங்களையும் பலிபீடத்தில் பலிகொடுத்து, மூலவரைத் தரிசனம் செய்து, பிரகாரத்தை மூன்றுமுறையோ அல்லது ஐந்து முறையோ சுற்றிவர வேண்டும். தூயமனத்துடன் ஆலயம்; செல்வதால் மனதுக்கு அமைதியும் சந்தோசமும் கிடைக்கும்.